உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் தகராறு; இருவர் கைது

பொது இடத்தில் தகராறு; இருவர் கைது

புதுச்சேரி ; பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.வழுதாவூர் சாலை தனியார் மது கடை அருகே பொதுமக்களிடம் ஒருவர் தகராறு செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு தகராறு செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சண்முகாபுரத்தை சேர்ந்த கார்த்தி, 40; என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.அதே போல, சேதராப்பட்டு பொருளாதார மண்டலம் அலுவகம் அருகே, மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த, வானுாரை சேர்ந்த வினோத், 35; என்பவரை சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை