உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

 தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருக்கனுார்: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில், 4ம் கட்டமாக மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார் கடை வீதியில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. முகாமில் ஜெகத்ரட்சகன் எம்.பி., பங்கேற்று உறுப்பினர் படிவம் வழங்கி, சேர்க்கையை துவக்கி வைத்தார். அவைத் தலைவர் சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மண்ணாடிப்பட்டு தொகுதி மாநில துணை அமைப்பாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், தொகுதி செயலாளர் கலைவாணன், திருபுவனைத் தொகுதி செயலாளர் பார்த்திபன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகிலன், நெட்டப்பாக்கம் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை அமைப்பாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் பூபதி, மங்கலம் தொகுதி தலைமைச் செயற்குழு உறுப்பினர் குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து திருபுவனை, நெட்டப்பாக்கம், மங்கலம் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை