உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டர் மீது வேன் மோதல் இன்ஜி., மாணவர் பலி

 ஸ்கூட்டர் மீது வேன் மோதல் இன்ஜி., மாணவர் பலி

புதுச்சேரி: ஸ்கூட்டரில் சென்ற இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் வேன் மோதி இறந்தார். உருளையன்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சோம்நாத்,21; தனியார் கல்லுாரியில் இறுதியாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் வழியாக மூலக்குளம் நோக்கி தனது ஸ்கூட்டரில் சென்றார். மேட்டுப்பாளையம் சாரயக்கடை அருகே சென்றபோது பின்னால் வந்த லோடு வேன் முந்தி செல்ல முயன்றது. அப்போது, வேன் ஸ்கூட்டர் ேஹண்டில் மீது உரசியதில் நிலை தடுமாறிய சோம்நாத் வலது பக்கமாக கீழே விழுந்தார். அவர் மீது வேன் ஏறி இறங்கியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ஞானசேகரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை