| ADDED : டிச 08, 2025 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கத்தின் ஆண்டு விழா நேற்று நடந்தது. லாஸ்பேட்டை, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். எஸ்.பி., சுருதி வாழ்த்தி பேசினார். விழாவில், தேசிய முன்னாள் படைவீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய தலைவர் லிங்களா ஜெகன் ரெட்டி, தென்மண்டல தலைவர் மகாராஜன், வினோவோ இந்தியா கம்பெனியின் மூத்த மேலாளர் கார்த்திகேயன் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத் தொகை உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தொடர்ந்து, கடந்த மே 7 ம் தேதி நடந்த ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்ற புதுச்சேரி ராணுவ வீரர் ஹவில்தார் கமலநாதன் கவுரவிக்கப்பட்டார். தேசிய முன்னாள் படைவீரர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு தலைவர் சீனிவாசன், பிரதமரின் சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சூடமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.