முன்னாள் முதல்வர் நினைவு தினம்
புதுச்சேரி: மறைந்த முன்னாள் முதல்வர் சண்முகம் நினைவு தினத்தையொட்டி, காங்., சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில், நேற்று அவரது திருவுருவப் படத்திற்கு மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., வைத்தியநாதன், மாநில பொதுச்செயலாளர் மருது பாண்டியன், மூத்த தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் ஷாஜகான் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர்.