மேலும் செய்திகள்
பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை
17-Apr-2025
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு இன்று மாலை ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றி பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதி அமைந்துள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி, ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.சித்திரை மாத வரும் பவுர்ணமி சிறப்பு மிக்கதாகும். 12 மாதங்களில் செல்லும் ஆன்மிக நடைபயணத்தின் பலன், இந்த சித்திரை மாத பவுர்ணமி நடைபயணத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன்படி, சித்திரை மாத பவுர்ணமி 40வது ஆன்மிக நடைபயணம் இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் துவங்குகிறது. நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சித்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர்.புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள் ஆன்மிக நடைபயனத்தில் பங்கேற்பர்.
17-Apr-2025