கணபதி சுவாமிகள் குரு பூஜை விழா
புதுச்சேரி: சற்குரு கணபதி சுவாமி கள் குரு பூஜை விழா நடந்தது.தட்டாஞ்சாவடி தொழிற் பேட்டை வளாகத்தில் உள்ள சற்குரு கணபதி சுவாமிகள் சித்தர் பீடத்தில் 24ம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று முன்தினம் தீப ஆராதனையுடன் துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று 2ம் தேதி காலை 6 மணிக்கு பிரணவ கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு திருவடி புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம் பாராயணம், 8.30 மணிக்கு மகா யாகசாலை வேள்வி, மகா அபி ேஷகம், ராஜ அலங்காரம் விமர்சையாக நடந்தது.மதியம் 12.30 மணிக்கு சற்குரு கணபதி சுவாமிக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம், மாலை 6 மணிக்கு அடியார் பூஜையும் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.