உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

புதுச்சேரி : வலிப்பு ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக இறந்தார். உறுவையாறு, புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி; கூலித்தொழிலாளி. இவரது மகள் மஞ்சு, 11. இவருக்கு சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் இருக்கிறது. இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நள்ளிரவு 1:30 மணியளவில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி