உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தானாக ஓடிய கார் மோதி சிறுமி படுகாயம் தந்தை மீது வழக்கு பதிவு

தானாக ஓடிய கார் மோதி சிறுமி படுகாயம் தந்தை மீது வழக்கு பதிவு

பாகூர்: தானாக ஓடிய கார் மோதி வீட்டு வாசலில் விளையாடிய சிறுமி படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தையின் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். தவளக்குப்பம் வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் ஜவகர், 48; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மாலதி. இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 4ம் தேதி இரவு ஜவகர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த டாடா நெக்சான் காரை ஸ்டார்ட் செய்து விட்டு, ேஹண்ட் பிரேக் போடாமல், வீட்டிற்குள் சென்றார். முன்பகுதி சறுகலாக இருந்ததால், இன்ஜின் அதிர்வு காரணமாக கார் திடீரென தானாகவே கீழ் நோக்கி இறங்கியது. அப்போது, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகள் சுருதி 14; மீது கார் மோதி, எதிரே இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. படுகாயமடைந்த சுருதியை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து, அவருக்கு முதுகு தண்டு வடம், வலது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சுருதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்திற்கு காரணமாக இருந்த சிறுமியின் தந்தை ஜவகர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி