மாஜி பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கவர்னர், முதல்வர் மரியாதை
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில் அவரது உருவப்படத்திற்கு, கவர்னர் மற்றும் முதல்வர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. குபேர் சாலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், ரமேஷ், பாஸ்கர், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.