மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டம்
27-Sep-2025
நெட்டப்பாக்கம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 11 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. நெட்டப்பாக்கம் சிவன் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற பொது மக்கள் நெட்டப்பாக்கம் கிராமத்தில் வடிகால் வாய்கால், சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக ஆணையரிடம் வழங்கினர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதேபோல், கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 10 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27-Sep-2025