உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு அரங்கில் தரைத்தளம் திறப்பு விழா

விளையாட்டு அரங்கில் தரைத்தளம் திறப்பு விழா

அரியாங்குப்பம்,: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லுாரியில் புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார். தவளக்குப்பம் ராஜிவ்காந்தி, அரசு கல்லுாரி வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் ரூ.88 லட்சம் மதிப்பில் மரத்திலான தரைத்தளம் அமைத்து புனரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார். விளையாட்டுத்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலைப்பொறியாளர் ஜெயமாறன், கல்லுாரி முதல்வர் மோனிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை