உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா என ஆய்வு செய்தனர். அப்போது உருளையன்பேட்டை தென்னஞ்சாலை ரோட்டைச் சேர்ந்த அறிவழகன் 50, என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, அவரது கடையில் இருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ