பணி நியமனம் கோரி உண்ணாவிரதம்
புதுச்சேரி: சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்ய கோரி, உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரிந்து பல்வேறு காரணங்களால் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யாமல் இருந்து வருகிறது. அதையெடுத்து, சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை 11:00 மணியளவில், பணி நியமனம் செய்ய வேண்டும் என 156 வாரிசுதாரர்கள் உண்ணாவிரதம் நடத்தினர். இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இதில், சுகாதாரத்துறை ஊழிர்களின் வாரிசுதாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பிரேமதாசன் தலைமையில், நடந்த போராட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் டேவிட் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.