காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி
புதுச்சேரி : காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சம் காப்பீடு நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிக்கை: கடந்த 2021ம் ஆண்டு என்.ஆர்., காங்., அரசு பொறுப்பேற்றவுடன் முதல் அமைச்சர் ரங்கசாமி காரைக்கால் பகுதியில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்தார். அதன்படி ரபி பருவம் 2020-2021ம் ஆண்டு நெல் பயிரிட்டு 428 விவசாயிகளுக்கு விடுபட்ட காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசை அணுகி, 2020-2021ல் நெல் பரியிட்ட 428 விவசாயிகளுக்கு ரூ.80.61 லட்சத்து 789 தேசிய காப்பீட்டு நிறுவனம் மூலம் நேற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியை நேரடியாக செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.