உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்குகிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்குகிறது

புதுச்சேரி, ; புதுச்சேரியில் 7 நாட்கள் நடக்கும், ஈஷா யோகா வகுப்பு நாளை (8ம் தேதி) துவங்குகிறது. புதுச்சேரி, வழுதாவூர் ரோடு, தருமாபுரி ஆ.சீ.ஆ. திருமண மண்டபத்தில் நாளை (8ம் தேதி) ஈஷா யோகா வகுப்பு துவங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் யோகா வகுப்பு தினமும், காலை 6:00 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது. இந்த வகுப்பில், ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பில், கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, கழுத்து முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது.பயிற்சி வகுப்பில், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், 94432 77486, 9443275040, ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளவும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி