ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 7ம் தேதி இயங்காது
புதுச்சேரி : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 7ம் தேதி, இயங்காது.இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 7ம் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, ஜிப்மரில் உள்ள வெளிப்புற நோயாளிகள் பிரிவு அன்றைய தினம் இயங்காது.ஆகவே நோயாளிகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவும். அவசர பிரிவு அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.