உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மதுக் கடைகள் நாளை மூடல்

 மதுக் கடைகள் நாளை மூடல்

புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை அனைத்து வித மதுபானம் கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கலால்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதியும், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதியும் நடந்தன. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரியில் நாளை அனைத்து மதுபானம், சாராயக் கடைகளை மூட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

visalatchi . A
மே 03, 2026 16:01

மது பானம் - கடை மூடி என்ன செய்ய சார், ஸ்டாக் வைக்கலாமே, மதுபான வெறியர்கள் , பிரியர்கள், பொழுது போக்குபவர்களின் மனது மூடவும் இல்லை, மனது திருப்பவும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை