உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரிப்பு

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் நேற்று அண்ணா நகர், சித்தானந்த நகர் மற்றும் டி.ஆர் நகர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பின்போது, அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் வசதி ஏற்படுத்தி கொடுப்பேன். மாற்றுத் திறனாளி இளைஞர்கள் சுய தொழில் துவங்க ரூ. 2 லட்சம் மூலாதன உதவித் தொகையாக வழங்கப்படும். தொகுதியில் முழு நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுப்பேன் என, உறுதி அளித்து, ஓட்டு கேட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி