வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Congrats. Go ahead. DONT DEPEND ON BULLS AND WASTE YOUR CAREER. SPREAD THE NEWS WIDLY. PUT THE BHARAT FIRST.
காரைக்கால்: காரைக்காலில் இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல் அறுவடைக்கு முன்னதாகவே அடுத்து மாற்றுப்பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி விடுகின்றனர். கடந்த ஜன., பிப்., மாதத்தில் நெல் அறுவடை முடிந்த பின், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, அம்ப கரத்துார், விழிதியூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பச்சை பயறு விதைக்கப்பட்டுள்ளது. தற்போது உளுந்து, பச்சை செடிகள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் திருநள்ளாறு, சுரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் இயந்திர மூலம் உளுந்து, பச்சை பயறுகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
Congrats. Go ahead. DONT DEPEND ON BULLS AND WASTE YOUR CAREER. SPREAD THE NEWS WIDLY. PUT THE BHARAT FIRST.