உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓவர் குடி மெக்கானிக் சாவு

ஓவர் குடி மெக்கானிக் சாவு

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கார் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 39; கார் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5;௦௦ மணியளவில், வீட்டில் மது போதையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி