இ-உண்டியல் சேவை அமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: சாரம் சுப்ரமணியர் கோவிலில் இ-உண்டியல் க்யூ ஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்தும் சேவையை அமைச்சர் ஜான்குமார் துவக்கி வைத்தார். சாரம் முத்து விநாயகர், சுப்ரமணியர் கோவிலில், இ-உண்டியல் க்யூ ஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்தும் சேவையை நேற்று அமைச்சர் ஜான்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்திருந்தார்.