மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
16-Dec-2024
புதுச்சேரி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்தார்.பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் மகள் சுவாதி, 19. இவர் வில்லியனுார் தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு, வெளியே சென்றார்.மாலை வரை வீட்டுக்கு வரததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
16-Dec-2024