இளம்பெண் மாயம் :தாய் புகார்
புதுச்சேரி: நெல்லித்தோப்பில் இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் அஷ்ரப்நிஷா. இவரது மகள் ஷப்ருன்நிஷா,23; இவர் சேதராபட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி, மேல்படிப்பிற்காக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் அஷ்ரப்நிஷா நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி பார்த்த போது, மகள் ஷப்ருன்நிஷாவை காணவில்லை. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.