சலவை தொழிலாளர்களுக்கு எம்.பி., நலத்திட்ட உதவி
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 33 சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டிகளை, செல்வகணபதி எம்.பி., வழங்கினார். செல்வகணபதி எம்.பி., பரிந்துரையின் பேரில், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, எம்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செல்வகணபதி எம்.பி., கலந்து கொண்டு புதுச்சேரியை சேர்ந்த 33 சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டிகளை, வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள், லாஸ்பேட் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.