நல்லுார் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை
திருபுவனை: நல்லுாரில் பொன்விழா கண்ட அரசு ஆரம்பப் பள்ளியில் மைதானம் அமைக்க வேண்டும்.மதகடிப்பட்டு, மடுகரை செல்லும் சாலையில் நல்லுரரில் அரசு ஆரம்பப் பள்ளி (சி.பி.எஸ்.சி.,) செயல்பட்டு வருகிறது. கல்விப் பணியில் 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா கண்ட இப்பள்ளி மாணவர்கள் விளையாட தேவையான மைதானம் வசதி இல்லை.எனவே புதுச்சேரி அரசும், பள்ளிக் கல்வித்துறையும் பள்ளிக்கு அருகே விளையாட்டு மைதானம் அமைத்து, மாணவ-மணவிகள் விளையாட தேவையான உபகரணங்களை அமைத்துக் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.