மேலும் செய்திகள்
ரூ.5.42 கோடி சொத்து சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
57 minutes ago | 3
ரிஷிவந்தியத்தில் பிரேமலதா? தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
2 hour(s) ago | 8
புதுச்சேரி : ஸ்மார்ட் வகுப்பு விஷூவல் கல் வித் திட்டத்தை அமல்படுத்த வேண் டுமென, புதுச்சேரி நகராட்சி கவுன் சிலர்கள் கூட்டமைப்பு தலைவர் அனிபால் நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தை போல புதுச்சேரியிலும் ஸ்மார்ட் வகுப்பு என்ற டிஜிட் டல் வகுப்பறை திட்டத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர வேண் டும். இத்திட்டத்தை முழுமையாக கொண்டு வந்தால் அயல்நாட்டு கல் வித் திட்டங்களுக்கு இணையாக புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரம் அதிகரிக்கும். எந்த ஒரு பாடத் தையும் விஷூவல் முறையில் சொல்லிக் கொடுத் தால் மாணவர் கள் ஆர்வத்துடன் பயில்வர்.
அதே சமயத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு, ஏழை பெற்றோர் கடன் வாங்கி தனியார் பள்ளிகளைத் தேடி பிள்ளைகளைச் சேர்க்கும் அவல நிலை மாறும். உயர்கல்வி, தொழில் கல்லூரிகள் என்று வரும் போது தனியார் கல்லூரிகளை விட அரசு கல்வி நிறுவனங்கள் தரம் உயர்ந்து காணப்படும். அரசு கல்லூரிகள், பள்ளிகள் தனியார் பள்ளிகளிடம் கோட்டை விடுவதை இது போன்ற திட்டங்கள் மூலம் சரி செய் யலாம்.ஸ்மார்ட் வகுப்பு திட்டமோ அல்லது வேறு எந்த புதிய திட்டத் தையோ அறிமுகம் செய்யும் போது தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் அதே சமயத்தில் உலக பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத் தையும் பேசும் அளவிற்கு மாணவர் களை தயார் செய்வதில் அரசு அக் கறை காட்ட வேண்டும்.அப்போதுதான் எதிர்கால சந்ததியினர் தன்னம்பிக்கையுடன் உலக அளவில் சாதனை படைக்க முடியும். அதற்கு முதலில், பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பாக ஆங்கிலத்தில் பயிற் சியளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
57 minutes ago | 3
2 hour(s) ago | 8