உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு காய்ச்சல் நர்சிங் மாணவி பலி

டெங்கு காய்ச்சல் நர்சிங் மாணவி பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி இறந்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர், நர்சிங் கல்லுாரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 5ம் தேதி ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரசோதித்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியில் அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து, அவரை, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி