டிரைவர் மர்ம சாவு போலீசார் விசாரணை
விழுப்புரம் : வளவனூர் அருகே கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்த குமளம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் விஸ்வலிங்கம், 29; கார் டிரைவர். இவர், நேற்று இரவு வீட்டின் அருகே உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.விஸ்வலிங்கம் மது அருந்திய நிலையில், கழுத்து அறுபட்டு கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.