உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

புதுச்சேரி : கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர், மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், தமிழரசன், நாகராஜ், ஆனந்தகுமார், மதன், அமுதன், பச்சையப்பன், செல்வம், ஏழுமலை, சதீஷ்குமார். இந்த 10 பேரும், ஆரோவில் பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள்.இவர்களால் பொது அமைதி கெடும் என்பதால், மேற்கண்ட 10 பேரும் ஊருக் குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என, தெற்குப் பகுதி எஸ்.பி., நந்தகோபால், கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சூசைராஜ் உள்ளிட்ட 10 பேரும் மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழை யத் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ