மேலும் செய்திகள்
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
1 hour(s) ago | 17
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் பளீச்!
3 hour(s) ago | 42
புதுச்சேரி : ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என, பீம்சேனா வலியுறுத்தி உள்ளது.வில்லியனூரில் நடந்த பீம்சேனா ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கலியமூர்த்தி, பொருளாளர் வெங்கடசாமி, செயலாளர்கள், சுப்பராயன், தலைமை நிலைய செயலாளர் நாகமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரி அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கடந்த ஆண்டிலிருந்து உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.இவற்றை உடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிடர் மக்கள், வாழ்க்கையில் மேல்மட்டத்திற்கு செல்வதற்கான சிறப்புக் கூறு நிதியை, அவர்களுக்கு மட்டுமே ஒதுக்கி, அவர்களின் கல்வி மேம்பாடு, வாழும் பகுதியை மேம்படுத்துவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 hour(s) ago | 17
3 hour(s) ago | 42