ரோடு ரோலர் மெக்கானிக்கை தாக்கியவர் மீது வழக்கு
பாகூர்:ரோடு ரோலர் மெக்கானிக்கை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.சோரியாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சித்தரசன், 43, ரோடு ரோலர் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மாலை குருவிநத்தத்தில் உள்ள தனது வயலுக்குச் சென்ற போது பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த செல்லக்கண்ணு என்பவர் சித்தரசனிடம் வாய் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் தாக்கியுள்ளார். இது குறித்து சித்தரசன் கொடுத்த புகாரின் பேரின் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.