பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா
திருபுவனை : திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.இக் கோவிலில் திருவிழா கடந்த 3ம் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முக்கிய விழாவான செடல் விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பிற்பகல் 1 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. என். ஆர்.காங்., பிரமுகர்கள் உள்பட பலர்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ராஜா செய்திருந்தார்.