பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நாளை இரவு 7:00 மணிக்கு பவுர்ணமி பூஜை நடக்கிறது.புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் பவுர்ணமி பூஜை விழா நாளை இரவு நடக்கிறது. இதையொட்டி இரவு 7:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நவாவரண பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பவுர்ணமி பூஜை நடக்கிறது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு அம்பாள் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.