தற்காலிக சபாநாயகர் டில்லியில் முகாம்
புதுச்சேரி: தற்காலிக சபாநாயகர் அன்பழகன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்றும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. புதிய சபாநாயகரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கிடையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேற்று டில்லி விரைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். டில்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ள அவர் இன்று 6ம் தேதி புதுச்சேரி திரும்புகிறார். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது மட்டுமின்றி சபாநாயகர் தேர்விலும் என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் சபாநாயகர் பதவியை பெற முனைப்பு காட்டுவதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் சபாநாயகர் பதவியை பெற அ.தி.மு.க.,வும் தற்போது தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.