மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
59 minutes ago | 1
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
1 hour(s) ago | 12
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
4 hour(s) ago | 42
புதுச்சேரி : இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இரு நாள் கலந்தாய்வுக் கூட்டம் என்.சி.சி., வளாகத்தில் நடந்தது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், லாஸ்பேட்டை என்.சி.சி., வளாகத்தில் நடந்தது. இதில், அவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு துறையின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் ஓய்வு பெற்ற படை வீரர்களுக்கான இயக்குனர் குமார் பேசுகையில், கடந்த 2008ம் ஆண்டு கடற்படையில் 'மூத்த மாலுமிகள் மன்றம்' துவக்கப்பட்டது. இவை, ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் கணவரை இழந்த மனைவியர், அவர்களைச் சார்ந்து வாழ்வோர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. ஓய்வு பெற்ற படை வீரர்கள் இந்த மன்றத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். ஏற்பாடுகளை கமாண்டர் ஆனந்த் செய்திருந்தார்.
59 minutes ago | 1
1 hour(s) ago | 12
4 hour(s) ago | 42