புதுச்சேரி பிரதிநிதிகள் கவர்னரிடம் வாழ்த்து
புதுச்சேரி: அசாமில் நடந்த பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுலா மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அசாமில், உலகின் 16 நாடுகள், இந்தியாவின் 18 மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுலா மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மாநாட்டில், சமூக சேவகர் ஆதவன் தலைமையில் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.