உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் 

நெட்டப்பாக்கம் : முதல்வர் ரங்கசாமி தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுக்கும் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தார்.தீபாவளி முடிந்தும் இதுவரை நெட்டப்பாக்கம் தொகுதியில் இலவச அரிசி வழங்கவில்லை. இதனை கண்டித்து கரியமாணிக்கம் பகுதி மக்கள், வி.சி., கட்சி நிர்வாகிகள் நெட்டப்பாக்கம் - தவளக்குப்பம் சாலை, நான்கு முனை சந்திப்பில் நேற்று மாலை மறியலில் ஈடுப்பட்டனர்.நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் பேச்சுவார்த்தை நடத்தி, துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை