உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: டி.என்.பாளையம், அரசு நடுநிலைப் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அருள் தலைமை தாங்கினார். ஆண்டியார்பாளையம் மற்றும் பூராணங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மோகன்தாஸ், சிரில் நிக்கோலஸ் போர்ட் லுாயிஸ் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில், மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து, சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜோதி ஷண்முகபிரியா, ஆனந்தன், சுப்ரமணியன், லட்சுமி, கணபதி, மஞ்சுளா, மனோசித்ரா, மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை