நெஞ்சுவலி ஏற்பட்டு செக்யூரிட்டி சாவு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அடுத்த ஒடைவெளி சின்ன வீராம்பட்டினம் வீதியை சேர்ந்தவர் பாண்டியன், 45, இவர் அரியாங்குப்பம் மாதா கோவிலில் செக்யூரிட்டியாக பணி செய்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கோவிலில் இருந்தவர்கள் அவரை, அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.