உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய நிதி அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு சிறப்பு மானியமாக கூடுதல் நிதி கேட்பு

மத்திய நிதி அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு சிறப்பு மானியமாக கூடுதல் நிதி கேட்பு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, புதுச்சேரிக்கு சிறப்பு மானியமாக கூடுதல் நிதி வழங்வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். டில்லிக்கு சென்று சபாநாயகர் செல்வம் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது மத்திய நிதி அமைச்சர், புதுச்சேரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்தார். பின் சபாநாயகர் புதுச்சேரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களுக்கும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சிறப்பு மானியமாக கூடுதலாக நிதி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தேவைப்படும் நிதி உதவிகள் வழங்கப்படும் என, உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !