உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று 30ம் தேதி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், 6:00 மணிக்கு தனுர்மாத பூஜை, 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த மாலையும், கிளியும் சாற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை