உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு 

 பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு 

புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. காந்தி வீதி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை நடந்த பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை