உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.பி., தலைமையில் துணை ராணும் கொடி அணிவகுப்பு

 எஸ்.பி., தலைமையில் துணை ராணும் கொடி அணிவகுப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் எஸ்.பி., தலைமையில் துணை ராணும் துப்பாக்கி ஏந்தியவாறு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணு படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொது அமைதியை நிலைநாட்டுதல், குற்ற செயல்கள் தடுப்பு நடவடிக்கை மற்றும் பதற்றமான ஓட்டு சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்வேண்டும் எனப்தற்கா கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி மேற்கு பகுதி எஸ்.பி., சுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசாருடன் மத்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 70க்கும் மேற்டோர் துப்பாக்கி ஏந்தியவாரு வில்லியனுார் நான்கு மாட வீதிகள், கோட்டைமேடு, கண்ணகி பள்ளி பைபாஸ் ரவுண்டான உள்ளிட்ட பகுதிகள் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். அரியாங்குப்பம்:: அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து துவங்கி வீராம்பட்டினம் வரை, தவளக்குப்பம் தனியார் கம்யூட்டர் கம்பெனியில் இருந்து துவங்கி நான்கு முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் துணை ராணுவத்தினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி