உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை

சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ேஹாமம் மற்றும் 108 சுமங்கலி பூஜை நடந்தது. புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ேஹாமம் நேற்று முன்தினம் துவங்கியது. கீதாசங்கர குருக்கள் தலைமையில் 18 சித்தர்கள் பூஜை, தட்சணாமூர்த்தி பூஜை, மகா கணபதி ேஹாமம், நவக்கிரக மற்றும் லட்சுமி ேஹாமம் நடந்தது. மாலை கலச பூஜை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டி ேஹாமம் மகா பூர்ணாஹூதி, வசோர்தாரையை தொடர்ந்து கலசம் புறப்பாடாகி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி