முதல்வர் ரங்கசாமிக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு
புதுச்சேரி, : வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டுமென அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு, புதுச்சேரி தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.சங்க தலைவர் முத்து அறிக்கை;புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகிறார். அதில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்துவந்த கலைமாமணி, தமிழ்மாமணி போன்ற விருதுகள் வழங்கி தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தினர்.மேலும், தமிழ்மாமணி விருதில் மேடைப் பேச்சு, கவிதை, கட்டுரை ஆய்வுகள் என்று பல தரப்பட்ட நிலைகளில் உள்ளவர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என பேசியிருப்பது பாராட்டுக்குரியது. இதற்கிடையே, புதுச்சேரி சட்டசபையில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் ரங்கசாமிக்கு, புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டுகளையும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.