மேலும் செய்திகள்
கேஷியர் மயங்கி விழுந்து சாவு
12-Sep-2025
காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு மேல காசாக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்முருகன். ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் வெற்றிச்செல்வி,24: தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார், திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால் விரக்தியடைந்த வெற்றிச்செல்வி, கடந்த 4ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Sep-2025