உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் வரவு-செலவு கணக்குகளை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

கோவில் வரவு-செலவு கணக்குகளை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

மதுரை: 'ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்கள், வரவு - செலவு உள்ளிட்ட விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கோவில் ஒன்றில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் தராதது குறித்த விசாரணை, மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தலைமையில் நடந்தது. இதில், சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றின் விபரம்: தகவல் ஆணையத்தில், இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறநிலையத்துறை சார்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலர் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு பெறுகின்றனர். தற்போதைய ஏஐ காலத்திலும் கோவில் நிர்வாகம் குறித்த தகவல்களை, 30 நாட்கள் காத்திருந்து பெறுவது வருந்தத்தக்கது. தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 4ன் கீழ், அறநிலையத்துறை கீழ்க்கண்ட விபரங்களை அனைத்து கோவில்களிலும் வெளியிட வேண்டும். கோவில் சொத்துக்கள், வரவு- செலவு விபரங்கள், வைப்பு நிதி, நிரந்தர சேமிப்பு விபரம், உலோகப்பொருட்கள், உபயதாரர்கள் நன்கொடை விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். கோவில் வரலாறு, சிறப்புகள் குறித்தும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பூஜை, திருவிழாக்கள் விபரம், பணியாளர்கள், அர்ச்சகர்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டும். அறங்காவலர்கள் குழு தீர்மானங்கள், அரசாணைகள், சுற்றறிக்கை உள்ளிட்டவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Chandrasekaran S
செப் 05, 2026 08:57

Every year,Auditing of accounts are being done by Local Fund Auditing unit of State Government.


Mayil Vahanan
செப் 04, 2026 21:48

கணக்குகளில் வெளிப்படைத்தன்மை நல்ல விஷயம் தான். வரவேற்கலாம்.


Venkatesan Srinivasan
செப் 04, 2026 23:53

இந்து கோவில் சொத்துக்கள் விபரம் வெளிப்படையாக போட்டால் சில அரசியல் வியாதிகள் திருடர்கள் இன்னும் திருட பாக்கி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் அரசு ஊழலுக்கு/ இந்து விரோத செயல்பாடுகள் வயது அறுபது நடந்து கொண்டு இருக்கிறது. பொன்விழா ஐம்பது கடந்து விட்டது. அடுத்த வருடம் விழா எடுத்து கொண்டாடலாம். நினைவு தபால் தலை வெளியிட கேட்டாலும் ஆச்சரியமில்லை.


தப்பு
செப் 04, 2026 21:19

ஆனைக்கு அல்வா வாங்கிப்போட்ட கணக்கெல்லாம் இருக்குமே


Sudha
செப் 04, 2026 20:33

அதனால் என்ன? சர்ச் அல்லது மசூதி னு பேரு மாத்திட்டா?


Haja Kuthubdeen
செப் 04, 2026 21:19

சொத்து பத்து..வரவு செவுகள் பக்தர்களுக்கு தெரியாமலே இருந்து இருக்கும்.இனி தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் அடுத்த மதத்தை நக்குறான்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி