ஹைமாஸ் விளக்கு எரிந்தது
அரியாங்குப்பம் : ஒரு ஆண்டாக, எரியாமல் இருந்த ஹைமாஸ் விளக்கு, தினமலர் செய்தி எதிரொலியால், சீர் செய்யப்பட்டது.தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருந்ததால், அப்பகுதி இருண்டு கிடந்தது. அப்பகுதியில், தொடர்ந்து விபத்துகள் நடந்து வந்தன. , இருளில் இருந்த அந்த பகுதியில் மது குடிப்பவர்களால், அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சமடைந்து வந்தனர்.இந்நிலையில், இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, ஓராண்டாக எரியாமல் இருந்த ைஹமாஸ் விளக்கு மின் துறை மூலம், சீர் செய்யப்பட்டு, நேற்று முதல், அந்த பகுதியில் எரியத் துவங்கியது.