கிராமங்கள் துர்நாற்றம் அங்காளன் எம்.எல்.ஏ., வேதனை
புதுச்சேரி : பூஜ்ய நேரத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:கிராமப்புறங்களில் துாய்மை பணியில் தேக்கநிலை காணப்படுகின்றது. கடந்த ஐந்து நாட்களாக குப்பைகள் வாரப்படவில்லை. ஆங்காங்கே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட குப்பை நிறுவனத்திற்கு பல மாதமாக நிலுவை தொகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குப்பைகள் சரியாக வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. நிலுவை தொகை வழங்கி, கிராமங்களை துாய்மையாக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்